கோயில்கள் இருப்பது தமிழ் நாட்டில் ! கும்பிடும் தெய்வங்களின் பெயரோ
சமற்கிருதத்தில் !
தமிழக மக்களே ! நீங்கள் வணங்கும் தெய்வப் பெயர்களைப் பாருங்கள் !
எடுத்துக் காட்டுக்காக ஒரு சில :-
சுயம்பீஸ்வர சுவாமி – லோகநாயகி [ நரசிங்கன்
பேட்டை ]
ஜம்புஹேஸ்வரர் – அகிலாண்டேஸ்வரி [
திருவானைக்கா ]
சிதம்பரேஸ்வரர் – சிவகாமி அம்பாள் [
திருவிசைநல்லூர் ]
சித்தேஸ்வரர் – சித்தாம்பிகை............[
திருச்சினம்பூண்டி ]
ராஜகோபாலசுவாமி – செங்கமலவல்லி [
மன்னார்குடி ]
வீரட்டேஸ்வரர் – ஞானாம்பிகை..............[
திருக்குறுக்கை ]
கும்பேஸ்வரர் – மங்களாம்பிகை.............[
கும்பகோணம் ]
சிவானந்தேஸ்வரர் – ஆனந்தவல்லி........[
திருக்கள்ளம் ]
அமிர்தகடேஸ்வரர் – அபிராமி...................[
திருக்கடையூர் ]
ஸ்ரீதளிநாதர் – சிவகாமி..............................[
திருப்பத்தூர் ]
வைத்தீஸ்வரன் – தையல்நாயகி [
வைத்தீஸ்வரன்கோயில்]
புஷ்பவனேஸ்வரர் –சௌந்தராம்பிகை [திருப்பூந்துருத்தி]
சுந்தரேஸ்வரர் – மீனாட்சி
அம்மன்............[ மதுரை ]
மயூரநாதசுவாமி – அபயாம்பிகை ........[
மயிலாடுதுறை ]
நேத்திரார்ப்பணேஸ்வரர் – சுந்தரகுசாம்பிகை [
திருவீழிமிழலை ]
பவ ஔஷதீஸ்வரர் – பிரஹந்நாயகி [
திருத்துறைப்பூண்டி]
வேதாரண்யேஸ்வரர் – வேதநாயகி [ திருமறைக்காடு
]
கோகர்ணேஸ்வரர் – பிரஹந்நாயகி [
புதுக்கோட்டை ]
காயாரோகணேஸ்வரர் - நீலாயதாட்சி [நாகப்பட்டினம்]
கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள்........... [மயிலாப்பூர்]
அர்த்தநாரீஸ்வரர் - பாகம்பிரியாள் [திருச்செங்கோடு]
தர்ப்பாரண்யேஸ்வரர்- பிராணேஸ்வரி [திருநள்ளார்]
சந்திரசூடேஸ்வரர் - மரகதாம்பாள்........ [ஓசூர்]
ராமநாதஸ்வாமி - பர்வதவர்த்தினி [இராமேஸ்வரம்]
ஜலகண்டேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி [வேலூர்]
ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி [ திருவானைக்கா]
பஞ்சநதீஸ்வரர் - தர்மசம்வர்த்தினி [திருவையாறு]
சோமநாதஸ்வாமி - ஆனந்தவல்லி [மானாமதுரை]
இந்தத் தெய்வங்கள் உறையும் கோயில்கள் எல்லாம் எங்கு உள்ளன ? தமிழ்நாட்டில் ! இந்தத் தெய்வங்களை வழிபடும் மக்கள் எந்த நாட்டினர் ?
தமிழ் நாட்டினர் !
இந்தத் தெய்வங்களுக்காக விழா எடுப்பவர்கள் யார் ? தமிழர்கள் ! இந்தக் கோயில்களை எடுத்துக் கட்டிக் குடமுழுக்கு
செய்பவர்கள் யார் ? தமிழர்கள் ! இந்தத் தெய்வப் பெயர்கள்
எல்லாம் எந்த மொழியில் உள்ளன ? சமற்கிருத மொழியில் !
இந்தக் கோயில்களில் எந்த மொழியில் பூசனை (அர்ச்சனை) செய்யப்படுகிறது ?
சமற்கிருத மொழியில் ! சமற்கிருதத்தில் பூசனை
(அர்ச்சனை) செய்தால் தான் இந்தத்
தெய்வங்களின் அருள் கிடைக்குமா ? (இந்த வினாவுக்கு எந்தத் தமிழனும் பதில்
சொல்ல மாட்டான்.)
இந்தத் தெய்வங்களின் பெயர்களைச் சமற்கிருத்ததில் மாற்றியது யார் ?
(இந்த வினாவுக்கும் எந்தத் தமிழனும் பதில் சொல்ல
மாட்டான்.). தமிழ்நாட்டில் மக்களின் தாய் மொழி தமிழ். அவர்களது பேச்சு மொழி தமிழ். எழுத்து மொழி
தமிழ். ஆட்சி மொழி தமிழ். தெய்வப் பெயர்கள் மட்டும் தமிழில் இருக்கக் கூடாதா ?
தெய்வத்தின் அருள் வேண்டித் தொழுகின்ற மொழி
தமிழில் இருக்கக் கூடாதா ?
தூங்காதே தம்பி தூங்காதே ! என்று பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
பாடியதற்குப் பொருள் புரியவில்லையா தமிழர்களே ! தூங்கித் தூங்கியே பலவற்றை
இழந்தீர்கள் ! தமிழையும் இழந்து கொண்டு இருக்கிறீர்கள் !
கோயில்களில் தமிழ் இல்லை ! கோயில்களில் குடி கொண்டுள்ள தெய்வப்
பெயர்களில் தமிழ் இல்லை ! நீதி மன்றங்களில் தமிழ் இல்லை ! நெடுந்தெரு அங்காடிப்
பலகைகளில் தமிழ் இல்லை !
மழலையர் பள்ளிகளில் தமிழ் இல்லை ! இல்லங்களில் நிகழும் உரையாடலில் தமிழ் இல்லை ! தமிழ் மெல்ல மறைந்து
கொண்டிருக்கிறது ! தமிழையே மறந்து கொண்டிருக்கிறோம் !
தமிழை மதிக்கத் தவறும் தமிழர்களே ! தமிழனென்று சொல்லடா ! தலை
நிமிர்ந்து நில்லடா ! என்ற பாட்டினைப் பாடுவதற்கு உங்களுக்கு உரிமையில்லை !!
தமிழன் என்ற உணர்வை இழந்து, உரிமைகளை இழந்து, அடையாளத்தையும் இழந்து, பொட்டுப்
பூச்சியாய், புன்மைத் தேரையாய் இயங்கிக்
கொண்டிருக்கும் தமிழனே !!
இனி நீ தமிழனென்று சொல்லாதே ! தலை நிமிர்ந்து நில்லாதே !
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை)
19]
{02-05-2022}
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக