விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 20 ஜூலை, 2022

சிந்தனை செய் தமிழா (66) கொத்தடிமைகள் !

குறைந்த ஊதியம் ! நிலையற்ற பணி !   ஆதரவற்ற தொழிலாளர்கள் !


உழைப்புக்கு ஏற்ற ஊதியமும்உண்பதற்கு அரை வயிற்றுச் சோற்றுக்கு வழியும்  இல்லாமல்செங்கற் சூளைகளிலும்கருங்கற் சுரங்கங்களிலும்கோழிப் பண்ணைகளிலும் நேரம் காலம் இல்லாமல் உழைத்துக் கொண்டிருந்த இலக்கக் (இலட்சக்கணக்கான கொத்தடிமைகளை மீட்டெடுத்து அவர்களுக்கு மறு வாழ்வு அளித்தார் இந்திராகாந்தி !

ஆனால் இன்றைய ஆட்சியாளர்களின் கொள்கைப் போக்கு இதற்கு நேர் மாறாகச் சென்று கொண்டு இருக்கிறதுமீண்டும் கொத்தடிமைகளை படித்த கொத்தடிமைகளை உருவாக்கும் வகையில் மாநில அரசு மற்றும் நடுவணரசுகளின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எப்படி என்று வியப்படைகிறீர்களா ? ஆய்வு செய்வோம் வாருங்கள் !

நாட்டு விடுதலைக்குப் பின்பு நடுவணரசின் சார்பில் பல தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுபல்லாயிரக் கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டதுஅஞ்சல் துறைஇருப்பூர்தித் துறைசெய்தித் தொடர்புத் துறைசுரங்கத் துறைதுறைவானிலைத் துறைவிண்வெளித் துறைதொழில் துறைவனத்துறை எனப் பல்வேறு துறைகளின் பணிகளும் விரிவாக்கப்பட்டுவேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டன !

மாநில அளவிலும்பள்ளிகள்கல்லூரிகள்பயிற்சி நிலையங்கள் எனப் பலவும் தோற்றுவிக்கப்பட்டுபடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டதுவேளாண் துறைஉள்ளாட்சி துறைமீன்வளத் துறைதோட்டக்கலைத் துறைபொதுப் பணித் துறைநெடுஞ்சாலைத் துறைதொழில் வணிகத் துறை எனப் பல துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுபல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புப் பெற்றனர் !

தமிழ்நாட்டில், அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த கல்வி என்னும் தளமானது  .கோ.இரா (M.G.R) ஆட்சிக்கு வந்த 1977 ஆம் ஆண்டு முதல் தனியாருக்கும் இடங்கொடுக்கத் தொடங்கியது ! கோவை செ.அரங்கநாயகம் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்பு பல நூறு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் தனியாரால் தமிழகமெங்கும் தொடங்கப்பட்டன !

தனியார் ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளின் எண்ணிக்கை 600 எண்ணிக்கையைக் கடந்ததுஇதன் விளைவுஅரசு நடத்தி வந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பல இழுத்து மூடப்பட்டன ! அங்கு ஆசிரியப் பயிற்றுநராகப் பணியாற்றும் வாய்ப்பு பல இளைஞர்களுக்குப்  பறி போயிற்று !

வேலை தேடித் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியை நாடியவர்களின் கல்விச் சான்றுகளை வாங்கி வைத்துக் கொண்டுமிகக் குறைந்த ஊதியத்தில் அவர்களிடம் ஆசிரியப் பயிற்றுநராக வேலை வாங்கினர் ! காலப்போக்கில்ஆசிரியப் பயிற்சி பெற்ற வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கில் பெருகியதால் ஆசிரியப் பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை குறையத் தொடங்கியதுஇதனால் பல தனியார் ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டன. 2017 –ஆம் ஆண்டில் தனியார் ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளின் எண்ணிக்கை 279 ஆகக் குறைந்து போயிற்று ! ஏப்ரல் 2018 நிலவரப்படி இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டுக் காத்திருப்போர் எண்ணிக்கை 2,62,681 ஆக உயர்ந்திருந்தது !

அடுத்து மூலை முடுக்கெல்லாம் பொறியியற் கல்லூரிகளைத் தொடங்க ம.கோ.இரா (M.G.R)  அரசு தனியாருக்கு இடம் தந்ததுமாட்டுக் கொட்டில்ஊர்திச் சீரகம் (MOTOR VEHICLE WORKSHOP) கோழிப் பண்ணைக் கொட்டகை எல்லாம் பொறியியற் கல்லூரி என்னும் பெயர்ப் பலகைகளைத் தாங்கி நின்றன ஏறத்தாழ 650 தனியார் தற்பொருள் (SELF FINANCING) பொறியியற் கல்லூரிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டன !

இங்கும் தமது கல்விச் சான்றுகளை ஒப்படைத்துவிட்டுமாதம் உருபா எட்டாயிரம்பத்தாயிரம் என்னும் மிகக் குறைந்த ஊதியத்தில் இளம் பொறியாளர்கள் ஆயிரக் கணக்கில் அமர்த்தப்பட்டுஇன்றும் கொத்தடிமைகளாகப் பணி புரிந்து வருகின்றனர் ! 2020 –ஆம் ஆண்டில் தற்சார்புப் பொறியியற் கல்லூரிகளின் எண்ணிக்கை 537 ஆகக் குறைந்திருக்கிறது !

தமிழ்நாட்டில் பதின்மப் பள்ளி (MATRICULATION SCHOOL), இடைநிலை வாரியப் பள்ளி (C.B.S.E. SCHOOL) என்ற பெயர்களில் பலநூற்றுக் கணக்கில் பள்ளிகளைத் தனியார் துறையில் தொடங்கிட இசைவாணை வழங்கப்பட்டதுஇதன் விளைவாக அரசுப் பள்ளிகளில் போதிய மாணவர்கள் சேராமல்பல பள்ளிகள் மூடப்பட்டன !

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களில் வெட்புலம் (VACANT) ஏற்படும் போதெல்லாம் அவை நிரப்பப் படாமல் பணிநிரவல் என்னும் முறையில்ஆசிரியர்கள் அங்கும் இங்குமாகப் பந்தாடப்பட்டனர்ஆயிரக் கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நீக்கப்பட்டனஆசிரியர் வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பகற்கனாவாகிப் போயிற்று !

தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு  இணையான ஊதியம் வழங்கப்படுவதில்லைஅவர்களது கல்விச் சான்றுகளை வாங்கி வைத்துக் கொண்டுகுறைந்த ஊதியத்தைக் தந்துவிட்டுக் கொத்தடிமைகளாக வேலை வாங்கப்படுகிறது !

காவல் துறைகல்வித் துறைமின்துறை உள்பட அனைத்துத் துறைகளிலும்வெபுலமாகும் பணியிடங்கள் நிரப்பப் படுவதே இல்லைஅங்கெல்லாம் ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்திற்கு ஆள்கள் அமர்த்தப் பட்டு வேலை வாங்கப்படுகிறதுஅரசுத் துறைகளிலேயே உழைப்புச் சுரண்டல் (LABOUR EXPLOITATION) உருவாகி இருக்கிறது !

கூரியர்” சேவைக்கு நடுவணரசு பச்சைக் கொடி காட்டிய பிறகுஅஞ்சல் துறை முற்றிலுமாக நொடித்துப் போய்விட்டதுபல்லாயிரக் கணக்கான இளைஞர்களுக்கு வேலை அளித்து வந்த அஞ்சல் துறைதனது கிளை அலுவலகங்கள் பலவற்றை மூடிவிட்டுத் தன் இறுதிக் காலத்தை நோக்கி  விரைந்து கொண்டிருக்கிறதுகூரியர் நிறுவனங்களில் வேலை செய்வோர் கைந்நிறையவா ஊதியம் வாங்குகிறார்கள் ? ஆயிரத்துக்கும் ஐந்நூற்றுக்குமாய் உழைத்துக் கொண்டிருக்கும் கொத்தடிமைகள் இங்கு ஏராளம் ஏராளம் !

வானூர்திச் சேவையில் தனியாரை நுழைய விட்ட பிறகுநடுவணரசு நடத்தி வந்த “ஏர் இந்தியா”, “இந்தியன் ஏர்லைன்ஸ்” ஆகியவை தள்ளாடிக் கொண்டிருக்கின்றனஇவற்றை விற்றுவிட்டுவானூர்திச் சேவையை முற்றிலும் தனியார் மயமாக்கிட நடுவணரசு முயன்று வருகிறதுதனியார் நிறுவனம் என்றாலே அங்கு மிகக் குறைந்த ஊதியம் அதிக நேர உழைப்பு என்பது தானே எழுதப் படாத விதி !

இருப்பூர்தித் துறையின் மீது இப்போது அரசின் பார்வை பதிந்து இருக்கிறதுசில இருப்பூர்தி நிலையங்களையே (RAILWAY STATIONS) நடுவணரசு தனியாரிடம் ஒப்படைத்துவிட்டதுகுறிப்பிட்ட ஊர்களுக்கு இடையே அமைந்துள்ள தடங்களையே (RAILWAY LINES) தனியாரிடம் ஒப்படைத்து அங்கு இருப்பூர்திகளை இயக்கும் உரிமையை அவர்களிடம் வழங்கி இருக்கிறது ! குறைந்த ஊதியத்துக்கு உழைக்கும் கொத்தடிமைகள் கூட்டம் இருப்பூர்தித் தளத்தில் கால் பதிக்கப் போகிறது !

இந்தியா முழுவதும் மின் வழங்கல் பணியை நடுவணரசு தனியாரிடம் ஒப்படைக்க நடவடிக்கையைத் தொடங்கிவிட்டதுஇந்த “மேதாவித் தனமான” முடிவால் நாடெங்கும் வேலை இழக்கப் போகும் மின்துறை ஊழியர்கள் எத்தனை இலக்கங்கள் (இலட்சங்கள்என்பது நடுவணரசுக்குத் தெரியாதா ?

ஆடத் தெரியாதவள் அரங்கம் கோணலாக இருக்கிறது என்று சொன்னாளாம் !  ஆளத் தெரியாதவர்கள் ஆட்சியில் அமர்ந்துகொண்டு எல்லாத் துறைகளிலும் அரசின் கட்டுப்பாட்டை விட்டுக் கொடுத்துவிட்டுத் தனியார் மயமாக்க முனைகிறார்கள் !

அரசுத் துறை நிறுவனங்களான ”இந்திய எண்ணெய் நிறுவனம்”, “பாரத கல்லெண்ணெய் நிறுவனம்”, “இந்திய நிலக்கரி நிறுவனம்”, “இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்”, போன்ற பல நிறுவங்களின் பங்குகள் தனியாரிடம் விற்கப்பட்டு வருகின்றனஇவற்றில் உள்ள அரசின் பங்கு 49% ஆகக் குறையும்போதுஅவற்றின் ஆட்சியுரிமை தனியாரிடம் கைமாறிப்போகும்நேரு காலத்தில் உருவாக்கிய தொழிற்சாலைகளும்அரசு நிறுவனங்களும் தனியார் கைகளுக்குப் போகப் போகின்றன !

சேலத்தில் உள்ள இரும்பாலையைத் தனியாரிடம் விற்பதற்குச் சில ஆண்டு களாகவே  முயற்சி நடக்கிறதுதொழிலாளர்களின் எதிர்ப்பால் அது  தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.  நடுவணரசின் உடைமைகளாக உள்ள அனைத்து நிறுவனங்களும்தொழிற்சாலைகளும்  தனியார் கைகளுக்குப் போய்விட்டால் அங்கு அரசின் சட்டதிட்டங்கள் செல்லுபடியாகாதுகுறைந்த ஊதியம்அதிக நேர உழைப்பு என்பது தானே தனியாரின் கோட்பாடு ! அப்புறம் என்ன ?   நாடெங்கும் கோடிக் கணக்கான கொத்தடிமைகள்நூறாயிரக் கணக்கான பணமுதலைகள் !

நடுவணரசை பணக்காரர்கள் ஆட்டுவிக்கிறார்கள்அவர்கள் கட்டளைக்கு ஏற்ப நடுவணரசு ஆடுகிறது ! கோடிக்கணக்கான மக்களைக் கொத்தடிமைகளாக்கும் கொள்கை முடிவுகள் ஒன்றன் பின் ஒன்றாக வரத் தொடங்கியுள்ளனமக்கள் விழித்துக் கொண்டு கேள்வி கேட்டால்எல்லைப்பகுதியில் பதற்றம்போர் மூளும் சூழ்நிலை என்னும் தோற்றத்தை உருவாக்கிமக்களை மறக்கடிக்கச் செய்கிறார்கள் !

காந்தியார் அயல் நாட்டவரிடமிருந்து நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தார்அவரது வழித் தோன்றல்கள் நாட்டைப் பணமுதலைகளிடம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள் !

சிந்தனை செய் தமிழா ! சிந்தனை செய் ! நீ சிந்திக்கத் தொடங்கினால் தான் ஆட்சியாளார்களின் அட்டூழியத்திற்கு ஒரு முடிவு வரும் ! நாடு கொத்தடிமைகளின் கூடாரமாக ஆவதற்கு முன் சிந்தனை செய் !

---------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
"தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 04]
{20--7-2-22}
----------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக